ரயில் பெட்டிக்குள் நுழைந்தது முதல் எங்கு பார்த்தாலும் இந்தி மயம்.
கண்ணில் பட்டவைகளை கிளிக்கியிருக்கிறேன்.
டிக்கெட் பரிசோதகரிடம் நான் கேட்டது இதுதான்..
“ரயிலுக்குள் தீப்பிடித்தால் என்ன செய்ய வேண்டும்?”
“அப்போ போய் இந்தி கத்துக்கணுமா சார்?”
*******************
(அப்டேட் : சுமார் ஒரு மணி நேரம் கடந்த பின்னர்...)
சென்ற முறை TTE பதில் ஏதும் கூறமால் ஒரு புன்சிரிப்பை மட்டும் உதிர்த்து விட்டு எஸ்கேப் ஆகி விட்டார்.
அவர் ஆந்திராவைச் சேர்ந்தவர்.
நானும் அவரை விடுவதாக இல்லை.
மீண்டும் என்னைக் கடந்து செல்லும் போது, இன்னொரு முறை கேட்டேன்.
“இல்லைன்னா.. அந்த நேரத்துல லாலுவுக்கு ஃபோன் பண்ணி என்ன எழுதி இருக்குன்னு இங்கிலீஷ்ல சொல்லச் சொல்லணுமா சார்?”
நக்கலுடன் கேட்டேன்.
அவரோ ஒரு பதிலில் என்னை கடாசி விட்டு சென்றார்.
“எதுக்கு அவ்ளோ கஷ்டப்படுறீங்க? உங்க மினிஸ்டர் வேலுவுக்கு ஃபோன் போட்டீங்கன்னா என்ன எழுதியிருக்குன்னு தமிழிலேயே சொல்லிடப் போறாரு!”